×

ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் பழையனூருக்கு வேண்டும் கூடுதல் பஸ்கள்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே பழையனூரில் பஸ்கள் போதியளவில் இயக்கப்படாததால் மாணவர்கள் பஸ்சின் படியிலும், மேற்கூரையிலும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.திருப்புவனம் அருகே பழையனூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பழையனூரை சுற்றியுள்ள சுமார் 10 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பகுதியில் பள்ளி முடியும் நேரத்தில் போதுமான பஸ்கள் இன்றி மாணவர்கள் தவித்து வருகின்றனர். சில பஸ்களை வேறு தடத்தில் திருப்பி விடுவதால் சரியான நேரத்திற்கு பஸ்கள் வருவதில்லை. இதனால் மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வரும் ஒரு பஸ்சிலே முண்டியடித்து கொண்டு ஏறி படியிலும், மேற்கூரையில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழையனூரில் பள்ளி முடியும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் பழையனூருக்கு வேண்டும் கூடுதல் பஸ்கள் appeared first on Dinakaran.

Tags : Old Noor ,Tiruppuvanam ,Palayanur ,
× RELATED தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது?...